Advertisement
Advertisement
Advertisement

Chopra india

Image Source: Google
Advertisement

ஆஸியை 350 ரன்ளுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு - ஆகாஷ் சோப்ரா!

By Bharathi Kannan June 10, 2023 • 15:03 PM View: 289

சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

அந்த அணியில் அதிகபட்சமாக டர்வீஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர். இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ரஹானே 89 ரன்களும், ஷர்துல் தாகூர் 51 ரன்களும், ஜடேஜா 48 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற பேட்ஸ்மேன்கள் தங்களது பங்களிப்பை செய்து கொடுக்க தவறியதால் இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement

Related Cricket News on Chopra india